Wednesday, April 7, 2010

மனசெல்லாம்

மனசெல்லாம் உன்னை நினைத்து வலிக்குது தோழா
பழசெல்லாம் நினைவுக்கு வருதே நேரில் வாடா
வான் என்று உன்னை நினைத்தேன் வானவில்லாய் மறைந்தாயே
திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே


கண் மூடினால் இருள் ஏது நீயே தெரிகிறாய்
நான் பேசினால் மொழியாக தானே வருகிறாய்
கரை மோதும் அலைகளை போல நினைவுகள் மோதிடுதே
ஊதுகின்ற சிகரெட் துண்டுகள் கதைகள் சொல்லிடுதே


தண்ணீரில் குமிழியை போல வந்தவன் போனானே
விளையாடும் மைதானங்கள் மயானம் ஆகியதே
இங்கு எனக்கென்று ஏதும் இல்லையேஎன் பள்ளியே முற்று புள்ளியே
இனி முழுவதும் நான் அழுவதும் உனை நினைத்தே தோழா


நீ எங்கு போனாலும் உன் நினைவாய் அலைகிறேன்
என் நண்பனே உனக்காக கிடக்கிறேன் என் நண்பனே
கரைகிறேன் உன் நினைவிலே
உன்னை இழக்கிறேன் என் நண்பனே


எனக்காக பிறந்தாய் பின் ஏனோ பிரிந்தாய்
உன்னாலே நினைவுகளாலே மோதி விடுகின்றதே
உயிராய் நீ இருந்தாய் கனவிலும் தெரிந்தாய்
நண்பா உன் நினைவால் நடைபிணம் ஆகிறேன்

1 comment:

  1. "திருக்குறளாய் வந்து என் வாழ்வில் இரு வரியில் முடிந்தாயே.."- யதார்த்தமான வரிகள்.. அருமை2

    ReplyDelete